திருக்குறள் 40/392 கல்வி


 40/392:எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்துமாகிய இரண்டும் வாழும் மக்களுக்கு கண்போன்றது.கல்வி என்பது மனிதர்கள் வாழுகின்ற சமுதாயத்திற்கு கண்போன்றது கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பளிக்கும் எண்ணையும் எழுத்தையும் மனிதகுலம் கற்றிருக்கவேண்டுமென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் வடிவமைப்பு . பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு 

Comments